நடிகர் திலகத்தின் குடும்ப வாரிசு… குதூகலிக்கும் சுஜாவருணி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பிறகு என்ட்ரி ஆனவர் சுஜாவருணி. வெள்ளித்திரையில் வலம் வந்திருந்தாலும் பிக்பாஸ் என்ட்ரி அவரை பிரபலபடுத்தியது.
ஆனால் அதற்கு முன்னரே நடிகர் திலகமான சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகனின் மகனான சிவகுமார் அவர்களை காதலித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திருமணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து இருவரின் மகிழ்ச்சியான மண வாழ்வின் அடையாளமாக சுஜா வருணி தான் தாயாகபோவதாக அறிவித்தார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 21 ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது.
இதனை மிகுந்த மகிழ்ச்சியோடு மறக்க முடியாத தருணம் என சுஜா வருணியின் கணவர் சிவகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் அதே நாளில் அவருடைய நடிப்பில் உருவான வெப் சீரியஸ் பிங்கர் பிரிண்ட் #FINGERPRINT வெளியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிலையில் சுஜா வருணி கணவர் சிவகுமார், மகன் மற்றும் தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். மருத்துவர் கனிமொழியை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.