இதுவும் சுட்ட கதையா !!!! இடைக்கால தடை கேட்டு வழக்கு !!!

இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான். பிரபல நடிகர்கள் பலரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ள நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஜான் சார்லஸ் என்பவர் சென்னை குரோம்பேட்டையைச் சர்ந்தவர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் நான் சரவெடி என்னும் பெயரில் கதை ஒன்றினை உருவாக்கி இருந்தேன்.

அந்த கதையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களிடம் விளக்கினேன். அவரும் நாம் விரைவில் இணைவோம் என்று கூறி அனுப்பினார்.

collage_New__New-1_11374

இப்பொழுது நான் கதையில் கூறியது போலவே நதிநீர் இணைப்பு, பங்கீடு, விவசாயம் என பத்திரிக்கையாளர் பிரதமரிடம் எடுத்துரைக்கும் காட்சி போலவே சூர்யா பத்திரிக்கையாளராக விளக்கமளிக்கும் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

சரவெடி என்னும் பெயரில் நான் கூறிய கதையை கே.வி.ஆனந்த் காப்பான் என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். மேலும்

org_58088201907031423

இப்படம் அடுத்த மாதம் வெளியாக கூடாது எனவும் அதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி 4ம் தேதிக்கு இவ்வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: