சிறப்பாக நடந்து முடிந்த 10000 பனைவிதைகள் மற்றும் மரம் நடுவிழா!.. முயற்சி தொடர வாழ்த்துகள்

d4724a09-3730-4278-9d8f-bd18ddc0fa7d

காஞ்சிபுரம் மாவட்டம் திருவங்காரனை என்னும் ஊரில் பிறந்து தற்போது சென்னையில் வசித்து வரும் திரு.ஜானகிராமன் அவர்கள் தனது பிறந்த ஊரான  திருவங்காரனையை காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும் என எண்ணி எக்ஸ்னோரா என்னும் மிகப்பெரிய அமைப்புடன் கைகோர்த்து 10000 பனைவிதைகள் மற்றும் மரம் நடு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.

55bf3b00-0190-47c6-a322-8023b45cd6b8

அவ்விழா நேற்று காலை 10 மணியளவில் ஊர் பொதுமக்கள், மாணவ மாணவிகள், இளைஞர்கள், மகளிர் குழுக்கள், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திரு.ஜானகிராமன்  அவர்களுடன் கைகோர்த்து சிறப்பாக நடந்துமுடிந்தது.

c21d5c79-cc87-466b-89d0-453b7bcf0411

மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினாராக திரைப்பட நடிகர் திரு. சவுந்தரராஜன் அவர்கள் பங்குபெற்றார். மேலும் இசையமைப்பாளர் திரு.பாமரன் அவர்களும் திரு. ஜானகிராமன் அவர்களுக்கு உறுதுணையாக நின்றார்.

எக்ஸ்னோரா அமைப்புடன் திரு.ஜானகிராமன் அவர்களை இணைத்து இந்த பெருங்கனவை நனவாக்கிய இசையமைப்பாளர் பாமரன் அவர்களுக்கும் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் மேலும் உங்கள் நற்பணி தொடர வணங்கி வாழ்த்துகிறோம்.

45038152-aa0a-4be4-ab64-02d767010189

திரு.ஜானகிராமன் போல பலரும் தங்கள் கிராமங்களையும், ஊர்களையும் காக்க முன்வர வேண்டும். இவ்வாறு ஒவ்வொருவரும் முன்னெடுத்து சிறப்பாக செயல்பாட்டால் இந்தியாவிலேயே தமிழகம் பசுமை நிறைந்த முதன்மை மாநிலமாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

e09886d5-fdf0-43ff-b1c1-70eec5932a92

One thought on “சிறப்பாக நடந்து முடிந்த 10000 பனைவிதைகள் மற்றும் மரம் நடுவிழா!.. முயற்சி தொடர வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: