தல சொல்லவே வேண்டாம் அவர் மனசு தெரியும்!!.. பேனர் விசயத்தில் தல ரசிகர்கள் அசத்தல் முடிவு…

அரசியல், சினிமா மட்டுமின்றி காதுகுத்து முதல் கல்யாணம் வரை அனைத்திற்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் அரசியல் கட்சி வைத்த பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இனி பேனர் வைக்க கூடாது என தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

ajithkumar-1-1568717068

மேலும் சினிமா ரசிகர்களும் பேனர் வைத்து தங்கள் ஹீரோக்களை கொண்டாடும் வழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் தற்போது ஹீரோக்கள் பலரும் தங்கள் ரசிகர்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்ட ரசிகர்கள் வேதனை அளிப்பதாகவும் பதிவிட்டிருந்தனர்.

ajith-122-1568698445

மேலும் இந்த மாதிரி தவறு நடக்கவும் கூடாது ஆகையால் நாம் சிந்தித்து செயல்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இப்படி போஸ்டர் ஒட்டி தல சொல்லாமலேயே தல ரசிகர்கள் தலய புரிந்துகொள்வோம் என்பது போல இனி பேனர் வைக்க மாட்டோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

இந்த போஸ்டர் குறித்த செய்திகளும் பதிவுகளும் இணையத்தில் தற்போது வைரளாகி வருகிறது. மேலும் மற்ற ஊர் தல ரசிகர்கள் இதை பாராட்டி வருவதோடு நாங்களும் அதே உறுதி மொழியை ஏற்போம் எனவும் தங்கள் இணையதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: