மாற்றத்தை என் படங்கள் பேசும்!!!..நயனின் பளிச் பதில்
தென்னிந்திய சினிமாவின் கதாநாயகி பட்டியலில் முதல் மற்றும் முக்கிய இடம் பிடிப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தன்னை தக்கவைத்துக்கொள்ள நயன்தாராவின் முயற்சிகளும் போராட்டங்களும் அத்தனை.
பல முறை சர்ச்சைகளுக்கு ஆளானவர் நயன்தாரா. மேலும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்பதை தவிர்த்திருந்தார். இதனை பலரும் பெரும் குற்றச்சாட்டாகவும் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்துவரும் நயன்தாரா தற்போது ஆங்கில இதழுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டியளித்துள்ளார்.
அதில் நான் நினைப்பதை இந்த உலகம் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லையே. என் வேலை நடிப்பது. அதை நான் செய்கிறேன். நான் நடிக்கும் படங்கள் பேசும். கூட்டம் என்றாலே எனக்கு அலர்ஜி. தனிமை தான் மிகப்பிடிக்கும்.
மேலும் கூட்டமாக இருக்கும் இடத்தில் என்ன செய்வதென்று எனக்கு தெரியாது. நான் சாதரணமாக பேசுவதை சர்ச்சைக்குரிய விஷயம் ஆக்கிவிடுகின்றனர். இந்த சர்ச்சைகளால் வரும் பிரச்சனைகள் அதைவிட பெரிதாக சமாளிக்க முடியாததாக உள்ளது.