உலக நாயகனே, நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!!.. கமலை கண்கலங்க வைத்த பிரபு!!!…
தமிழ் திரையுலகில் வியக்கவைக்கும் கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல தன்னால் படைக்கப்படும் கதைகளங்கள் கூட வித்தியாசப்படுத்தி காட்ட அதிகம் மெனக்கெடும் இளமை மாறா இளைஞன் மாபெரும் கலைஞன் உலக நாயகன் என அனைவராலும் போற்றப்படுவர் கமலஹாசன்.
களத்தூர் கண்ணம்மா படம் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமலஹாசன் உலக நாயகனாக உருவானார். களத்தூர் கண்ணம்மா படம் வெளியாகி தற்போது அறுபது ஆண்டுகள் ஆகிறது.
அப்படியானால் உலகநாயகனின் சினிமா வாழ்க்கை 60 ஆண்டுகளை எட்டிவிட்டது, இதற்காக திரையுலக பிரபலங்கள் பலரும் கமலஹாசனுக்கு வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.
அவ்வகையில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகரான உலகநாயகனை சிவாஜி அவர்களின் வாரிசுகள் மறந்துவிடுவார்களா என்ன?. இந்த 60 ஆண்டு சினிமா சினிமா வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறவே தங்களுடைய அன்னை இல்லத்தில் பிரபு அவர்கள் குடும்பத்தாருடன் கமலுக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
பிரபுவும் அவருடைய குடும்பத்தாரும் இணைந்து கமலுக்கு தங்களுடைய இல்லத்தில் விருந்து வைத்து நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த நினைவுப் பரிசில் கவிதை ஒன்றினையும் பொறித்துள்ளார். இதோ அந்த கவிதை
அன்னை இல்லத்தில் நடைபெற்ற இந்த அன்பு பரிமாற்றத்தை புகைப்படங்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து, வழக்கம் போல நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த வாழ்த்துமடல் வாசகங்கள் என்னை கண்கலங்க வைத்தது.மனம் புன்னகைத்தது” என்று பதிவிட்டுள்ளார்.
அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. pic.twitter.com/cKo8B6HXah
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2019