பஸ்ஸில் பயணம் செய்த இன்ஜினியருக்கு கொரோனா வைரஸ்… உஷார் நிலையில் தெலுங்கானா

ஐதராபாத்தில் நேற்று நடந்த மருத்துவப் பரிசோதனையில் 24 வயதான பெங்களூருவைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. 


 மேலும் அவரோடு பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் அவரோடு தொடர்பு கொண்டவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என மொத்தம் 80 க்கும் மேற்பட்டோர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 


 நேற்று பேட்டியளித்த மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் நாடு முழுவதும் 3217 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.


 ஏற்கனவே கேரளா மாநிலத்தில் கொரோனா  வைரஸ் தொற்றுக்கு ஆளான மூன்று பேரும் மருத்துவ சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் மேலும் இரண்டு பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளது இந்தியர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: