இன்னொரு மலாலாவின் கதை!. திரௌபதி மிரட்டுவாள் !!..
இயக்குனர் மோகன், பழைய வண்ணாரப்பேட்டை என்னும் சிறந்த எதார்த்தமான படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நாயகன், நாயகி என முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவமுள்ள படமாக அமைந்தது.
இதனையடுத்து தற்போது மோகன் இயக்கத்தில் ஜி.எம்.படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் திரௌபதி. பிரஜின், நிசாந்த், ரிச்சட் என மூன்று பெரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபின் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை இந்தியாவின் முக்கிய இசை நிறுவனம் லகாரி மியுசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
மேலும் இப்படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் நிச்சயம் இப்படம் மிரட்டும் எனத் தெரிவித்து இருக்கிறார். மேலும் இப்படம் பெண்கள் குறித்த கதையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.