தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி அழைக்கிறார்
வரும் மே 5ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இரண்டாவது மாநில மாநாடும், 37வது வணிகர் தினமும் கொண்டாடப்பட இருக்கிறது.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பானது வணிகர்களின் உரிமையை மீட்டெடுப்பதிலும், வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நலிந்த வணிகர்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் முனைப்பாக உறுதியுடன் செயல்பட்டு வரும் பேரமைப்பாகும்.
இந்த தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு தான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வெகுவிமரிசையாக பிரம்மாண்ட முறையில் வரும் மே 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் கொளத்தூர் த.ரவி அவர்கள் அனைத்து வணிகர்களையும் அவர்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறார்.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இரண்டாவது மாநில மாநாடுக்கான எழுச்சிப் பாடலை உருவாக்குவதில் MP ரமேஷ் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது இந்த எழுச்சி பாடலுக்கான இசைக்கோர்ப்பு பணிகள் சென்னையில் உள்ள முன்னணி ஒலிப்பதிவு கூடத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பாடலுக்கான இசையமைப்பு பணியை இசையமைப்பாளர் பாமரன் அவர்கள் ஏற்று செய்து வருகிறார்.